search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறப்பு விழா:"

    • கல்வியுடன் பேச்சு திறமையை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்
    • ஆசிரியர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் அறிவுரை

    நாகர்கோவில்:

    தக்கலை. ஆர்.பி. ராஜ லெட்சுமி இந்து வித்யாலயா பள்ளியின் புதிய கட்டிடம் புலியூர்குறிச்சியில் கட்ட ப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விசுவ இந்து வித்யாகேந்திரா நிறு வன தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார்.

    பொதுசெயலாளர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளியின் புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    மேலும் இந்து வித்யாலயா பள்ளிகளின் இணைய வலைதளத்தை தொடங்கி வைத்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது:

    சத்தியம் மூன்று பரிணா மங்களை கொண்டது. அது உண்மை, வாய்மை, மெய்மை ஆகும். உள்ளத்தில் ஒளி இருக்குமானால் உண்மையி ருக்கும், பேச்சில் உண்மை இருந்தால் வாய்மை இருக்கும். செயலில் உண்மை இருந்தால் மெய்மை இருக்கும். பேச்சில் சாமர்த்தியம் கொண்ட வர்கள் பொய் பேசினாலும் மெய்யாகி விடுகிறது.

    பேசத் தெரியாதவர்கள் உண்மை பேசினாலும் அது பொய்யாகி விடுகிறது. ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி யோடு பேச்சு திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் ரோல் மாடலாக பெற்றோர்கள் ஏன் இருக்கக்கூடாது. குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு வளர்வதில்லை. நம் செயல்பாட்டை பார்த்து தான் வளர்கிறார்கள். பெற்றோ ர்கள் பிள் ளைகளிடம் பொய் பேசக்கூடாது என கூறிவிட்டு, வீட்டின் டெலிபோன் அழைப்பை எடுக்கும் பிள்ளைகளிடம் அப்பா வீட்டில் இல்லை என கூறு என்று பொய் பேச சொல்கிறார்கள்.

    எந்த கல்வி மாணவர்களை ஒழுக்க பாதைக்கு அழைத்து செல்கிறதோ அந்த கல்வியை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண் கள் போதிக்கும் கல்வியில் இருக்கும் ஒழுக்கத்தை விட பெண்கள் போதிக்கும் கல்வியில் ஒழுக்கம் அதி கமாக இருக் கும். இந்த பள்ளியில் பெண் ஆசிரியர்களே. அதிகமாக இருக்கிறார்கள் இதனால் இங்கு பயிலும் பிள்ளைகள் நல்ல ஒழுக் கம் கொண்டவர்களாக இருப்பா ர்கள்.

    மனிதன் ஒரு நிலையில் இருக்கும் போது பணத்தி ற்கும், புகழுக்கும் ஆசைப்ப டுவார்கள் அவர்களின் அடுத்த நிலை என்பது எதையா வது சாதிக்க வேண்டும் என்பதாக இருக்கும். அப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் தான் இந்த பள்ளியை வழிநடத்தி செல்பவர்கள் அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பங்கேற்ற வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். விசுவ ஹிந்து வித்யாகேந்திர இணை பொதுச்செய லாளர் கிருஷ்ணமாச்சாரி, உறுப்பினர் கோபால் கமலம்மாள், ஓய்வுபெற்ற கலெக்டர் செல்லமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மற்றும் கட்டுமான என்ஜினீயர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி யின் ஒருங்கிணைப்பா ளர்கள் சின்னதங்கம், மணி, அனைத்து பள்ளிக ளின் முதல்வர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள். வி.பி.ஆர் நிறுவனத்தின் என்ஜினீயர் ராஜ சேகர், கட்டிட ஒருங்கிணைப்பா ளர்கள் ராமகிருஷ்ணன், ஸ்ரீதர், ராம சப்பு செல்ல த்துரை ஐ.ஏ.எஸ், மேற்பார்வையாளர்களான என்ஜினியர்கள் ரஞ்சித் ராஜா, விக்னேஷ், பிரபு, அனீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் மாலதி நன்றி கூறினார்.

    ×